உலக போதைப்பொருள் ஒழிப்பு மாபெரும் பேரணி

Events General Events

Posted by admin on 2024-06-26 00:27:00 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 34


உலக போதைப்பொருள் ஒழிப்பு மாபெரும் பேரணி

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு குழு மற்றும் பழனி காவல்துறையுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் இருந்து பேருந்து நிலையம் மயில் ரவுண்டான வரை சுமார் 1500 மாணவர்களை கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வினை பழனி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு எஸ். தனஞ்ஜெயன் மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் மற்றும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் செயலர் ரெ.சா. வெங்கடேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மற்றும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Search
Categories
Leave a Comment: